இலங்கை செய்திகள்
யாழில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிலமொன்றின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அர்ச்சுனா குறித்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிவரும் நிலையில், பெண்ணும் அந்த சொத்துக்கு உரிமைக்கோரியுள்ளார்.
அர்ச்சுனா அந்த நிலத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது சம்பவ இடத்திற்கு வந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




