சினிமா செய்திகள்
எதுக்கு பேசணும், அப்புறமா உள்நோக்கம் இல்லனு சொல்லணும்? – வாசுகி பாஸ்கர்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘கருப்பு’.
படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
இந்த நிலையில் ‘கருப்பு’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே
ஆனால் தற்போது இது குறித்து இளையராஜாவின் சகோதரர் மகள் வாசுகி பாஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்ததாவது
படத்திற்கு உதவாத தேவையில்லாத கமெண்ட். எதற்காக அதை சொல்லணும் பின்னர் வேண்டுமென்றே செய்யவில்லை என்று தெரிவிக்கணும்?. அப்படினா வேண்டுமென்றே செய்வது என்றால் என்ன? நம் முதல்வர் விஜய் முதல்வர் ஆகும் வரை அவருக்கு இதே தான் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.




