Tuesday , 4 November 2025
கோவை மாணவி

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்!

Spread the love

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது.

அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

மிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?. கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம்

Check Also

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Spread the loveயாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று …