முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது..

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா நீதிவான் முன்னிலையில் நாளைய தினம் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா – வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போதே குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே, டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்துள்ள
கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை!




