நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின் போது மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக எழில்வேந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மீது கிளிநொச்சி பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் எழில்வேந்தன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் …
Read More »வவுனியாவில் இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை!
வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு …
Read More »பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள்
பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் 27ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவு நிகழ்வுக்காக தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நாள் …
Read More »இறங்குமுகத்தில் இலங்கை ரூபாய்!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 71 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 20 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 405 ரூபாய் 83 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி …
Read More »கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பில் பொலிஸாரை தாக்கிய ஏழு பேர் கைது!
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். இதன்போது பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது தாக்கி விட்டு தப்பியோட முற்பட்ட ஏழு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை …
Read More »இன ரீதியாகச் செயற்படும் அரசு! – விக்கி காட்டம்
“பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இன ரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று காலை யாழ்ப்பாணம், சேர் பொன் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகத்தைத் திறந்து …
Read More »யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமையவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்தவர்களைச் சோதனையிட்டபோதே அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து சந்திப் பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு …
Read More »தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு!
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலயம் இன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம் 58, சேர் பொன் இராமநாதன் வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் மன்னார், வவுனியா மாவட்டங்களின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.. நிகழ்வில் இறுதியில் கட்சியின் மகளிர் அணியினரின் ஏற்பட்டில் பாடசாலை …
Read More »சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் …
Read More »பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்
பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஒரு அசம்பாவித சம்பவம் பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில், பப்ஜி கேம்க்காக இளைஞர் ஒருவர், வாங்கிய கடன், வட்டியும் முதலுமாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த கடனுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, குறித்த இளைஞனைக் கடனிலிருந்து மீட்டெடுக்க, அவரது தாய் தனக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து, அவரை அந்த கடனிலிருந்து மீட்டுள்ளார். எனினும், …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news