வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், மதவாச்சியில் இடம்பெற்றுள்ளது. மதவாச்சி பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அந்த மகன், தாயைக் கோடரியால் தலையில் தாக்கிக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கொலைக்கான …
Read More »தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி.
தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி. “இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த அரசும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுகின்றது.” – இவ்வாறு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இம்முறை இடம்பெற்ற …
Read More »ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போர் தொடுப்போம் – கவாஜா ஆசிப்
ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் அதன் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. அதன்படி, தோஹாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டு கடந்த 19 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே 2 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் …
Read More »செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில்
செவ்வந்திக்கு உதவி புரிந்தமை – 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன. அத்துடன், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 28.10.2025
இலங்கையின் முக்கிய செய்திகள் – 28.10.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 28.10.2025
Read More »சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்
சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், இது தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை கொண்ட இடமாக அமைந்துள்ளமையினால், உலகளாவிய ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை …
Read More »புயல் அடுத்த 12 மணிநேரத்தில்
புயல் அடுத்த 12 மணிநேரத்தில் வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும். புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் …
Read More »போதைப்பொருட்களை ஒழிக்க
போதைப்பொருட்களை ஒழிக்க போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு மிக அவசியம் எனவும் அவர் இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார். இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த …
Read More »இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
Read More »நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்ப விசாரணையில் இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தற்காலிக காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news