லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை வழக்குத் தொடராமல் விடுவித்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்ற சில சந்தேக நபர்கள் விசாரணையின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்பட்டு வருகின்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் அவை இதுவரை மீட்கப்படவில்லை. கொள்ளை நடந்த நாளில் நால்வர் கொண்ட கும்பல் ஒரு உயர்த்தும் லாரியை பயன்படுத்தி அருங்காட்சியகத்தின் அபொல்லோ கேலரியிலுள்ள குரோன் நகைகள் வரை சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. லூவரின் …
Read More »வீட்டுக்குள் அத்துமீறி வெறியாட்டம்! – ஐவர் கைது
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர்களைத் தாக்கிய கும்பல் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது. களுத்துறையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்திப் பலமாகத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் களுத்துறை பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் …
Read More »அரச இல்லத்திலிருந்து சந்திரிகா வெளியேற்றம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு – சுதந்திர வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது உடமைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அரசால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வதிவிடங்களை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய அவர் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத்திகுள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் அவர் அந்த வதிவிடத்திலிருந்து …
Read More »முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் – எஸ்.எம்.மரிக்கார்!
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார். இரு கட்சிகளும் இணையாமல் என்னிடம் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்க மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு வரி குறைப்பினை …
Read More »மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது – சாகர காரியவசம்!
ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றதைத் …
Read More »பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்
பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக்கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார். இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.11.2025 | Sri Lanka Tamil News “முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!”
Read More »இன்றைய ராசிப்பலன் – 01.11.2025
இன்றைய ராசிப்பலன் – 01.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 01-11-2025, ஐப்பசி 15, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.12 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் மாலை 06.20 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் மாலை 06.20 வரை பின்பு மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய …
Read More »“முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!”
“வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது என நாங்கள் சொல்லியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் …
Read More »யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news